எனக்கும் தோட்டம் கொத்த தெரியும், களை எடுக்க தெரியும், வாங்க களை எடுப்போம் என வயலில் இறங்கி பெண்களுடன் தோட்ட வேலை செய்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செளமியா அன்புமணி வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள, போதக்காடு கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியில் இருந்த தக்காளி தோட்டத்தில் களை கொத்திக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடம் சென்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, எனக்கும் தோட்டம் கொத்தி களை எடுக்க தெரியும், வாங்க களை எடுப்போம் என வயலில் இறங்கி பெண்களுடன் தோட்ட வேலை செய்து களை எடுத்து கொண்டே வாக்குசேகரித்தார்.
மேலும் படிக்க: பாஜக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் ஐடி ரெய்டு… அலுவலகத்திலும் புகுந்து சோதனை… தொண்டர்கள் ஷாக்..!!
இப்பகுதியில் தக்காளி தொழிற்சாலை கொண்டு வருவேன், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பது பாமக தான். ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் நபர்களுக்கு டிராக்டர் கொடுக்க வேண்டும் என கூறியவர் பாமக தலைவர் அன்புமணி தான். ஆகையால் விவசாயம் செழிக்க மாம்பழம் சின்னத்துல வாக்களியுங்கள், என கேட்டு வாக்கு சேகரித்தார்.
மேலும், அதே பகுதியில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களிடையே வாக்கு சேகரித்தார் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.