பூத் ஸ்லிப் வழங்குவதாக கூறி பண பட்டுவாடா செய்வதாக, சம்பவ இடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் திலகபாமா சென்றதால், திமுக கவுன்சிலர் அங்கிருந்து ஓடியதாக சொல்லப்படுகிறது.
19ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி திண்டுக்கல்லில் கடைசி கட்ட பிரச்சாரம் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் திலகபாமா காலை 7 மணி முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். காலை 10 மணிக்கு திண்டுக்கல் பழனி சாலையில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எம்எஸ்பி பள்ளி எதிரே திமுக வார்டு கவுன்சிலர் சேகர் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் மற்றும் பண பட்டுவாடா செய்வதாக தகவல் வந்தது. இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திலகபாமா, தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று திமுக வார்டு கவுன்சிலர் சேகரிடம், “எதற்காக நீங்கள் பூத் ஸ்லிப் வழங்குகிறீர்கள்..? பணப்பட்டு வாடா செய்கிறீர்களா…?” என்று கேட்டதற்கு தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு வேட்பாளர் தலைவர் திலகபாமா தகவல் அளித்ததை அடுத்து அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், அதற்கு உடந்தையாக திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேட்பாளர் திலகபாமா கோரிக்கை விடுத்தார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.