பாமக சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் அருள் அவர்களை அலைபேசியில் அவதூறாகவும் அநாகரியமாகவும் பேசிய பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
சேலம் சட்டமன்ற மேற்கு தொகுதி உறுப்பினர் மற்றும் தமிழக சட்டப்பேரவை பாமக கொரடாவாகவும் உள்ள அருள் அவர்களை அலைபேசியில் அவதூறாகவும் அநாகரிகம் பேசி பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மதுரை தெற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், ஒன்றிய தலைவர் விஜி ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், குருபாலமுருகன் உள்ளிட்டோர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.
மேலும், உரிய நடவடிக்கை எடுக்க காலதாமதப்படுத்தினால் கட்சித் தலைமை கூறும் முடிவை கேட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.