‘இது தீப்பிடித்த காடு.. பறவைகளே! பத்திரம்’ : ஊரடங்கு தளர்வுகள் பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து..!
31 August 2020, 1:06 pmகொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று நள்ளிரவுடன் முதல் தற்போதைய பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
இதனடிப்படையில், தமிழகத்தில் புதிய தளர்வுகளை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான இ.பாஸ் நடைமுறையை ரத்து, மாவட்டத்திற்குள்ளான பொது, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, தமிழகம் முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகள் பற்றி கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது :- ஊருக்கு வழங்கப்பட்ட
ஊரடங்கின் தளர்வில்
உயிர்க் கொல்லி
நுழைந்துவிடக் கூடாது.
மீண்டும் இயங்கப்போகும்
வாழ்வியல் வெளியில்
கடும் கட்டுப்பாட்டைப்
பெரிதும் கைக்கொள்வீர்
பெருமக்களே!
இது தீப்பிடித்த காடு
பறவைகளே! பத்திரம், எனத் தெரிவித்துள்ளார்.
0
0