தமிழகம்

டீ குடிக்கச் சென்ற மாணவி.. சென்னை ஐஐடி கேண்டீனில் அருவருக்கத்தக்க சம்பவம்!

சென்னை ஐஐடி கேண்டீனில் டீ குடிக்கச் சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவி ஒருவர், வளாகத்தில் உள்ள கேண்டீனில் டீ குடிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியிடம் கேண்டீனில் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.

எனவே, இது குறித்து ஐஐடி மாணவி நேரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், சென்னை ஐஐடிகேண்டீனில் பணியாற்றி வரும் ஸ்ரீராமை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமிடம் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்தரப்பு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மாணவி புகாரில் குறிப்பிட்ட சார் என்பது யார் என்பதைக் கேட்கும் வகையில் ‘யார் அந்த சார்’ என்ற கேள்வியை அதிமுக தொடர்ந்து எழுப்பி வருகிறது. இதனிடையே, இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: சென்னையைத் தொடர்ந்து புதுச்சேரி.. பல்கலை வளாகத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி?

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பெண்களைப் பின் தொடர்ந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கும் வகையில் சட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.