அடிதடி பிரச்சனையில் சிக்கிய மகன்.. தாயின் பைக்கை எடுத்து வந்த போலீசார்… காவல்நிலையத்தின் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..!!

Author: Babu Lakshmanan
21 October 2022, 9:25 am
Quick Share

புதுக்கோட்டை அருகே தனது மகன் மீது அடிதடி வழக்கு பதிவு செய்த கீரமங்கலம் காவல்துறையினர், தன்னுடைய இருசக்கர வாகனத்தை எந்த காரணமும் இல்லாமல் பறிமுதல் செய்து விட்டு, திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாக கூறி பெண் ஒருவர் காவல் நிலையத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளத்தைச் சேர்ந்தவர் கனகசிவம். இவரது மகன் விக்கிரமாதித்தன். இவருக்கும் குலமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறியதால் ரத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கீரமங்கலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

suicide attempt - updatenews360

இந்நிலையில் விக்ரமாதித்தனை தேடிச் சென்ற போலீசார், அவரது அம்மா விஜயாவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சனையின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் இதுவரை திருப்பி கொடுக்கப்படவில்லை.

suicide attempt - updatenews360

இது குறித்து விஜயா கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்று கேட்டதாகவும், அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த விஜயா நேற்று கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை கண்ட போலீசார், அதனை தடுத்து நிறுத்தி விஜயாவை காப்பாற்றினர். இதனால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 439

0

0