சோமங்கலம் அருகே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த ரவுடியை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த கண்டிகை எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது சோமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலையில் உள்ளன. இவருடைய கேங் தாதாவான மேத்யூவுக்கும், மற்றொரு தாதாவான லெனின் கேங்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு பல கொலைகள் அரங்கேறி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, சச்சினை சோமங்கலம் காவல்துறையினர் பல்வேறு வழக்குகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் எருமையூர் அருகே உள்ள சாய்ராம் கல்லூரி அருகே சச்சின் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, சோமமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் சச்சினை பிடிக்க சென்றனர்.
அப்போது, சச்சின் தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசிள்ளார். அது வெடிக்காமல் செயல் இழந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, தான் கையில் வைத்திருந்த அரிவாளால் காவலர் பாஸ்கரை என்பவரை சச்சின் வெட்டி உள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் சிவகுமார் பிரபல ரவுடி சச்சினின் கால் பகுதியில் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் தொடை பகுதியில் படுகாயம் அடைந்த ரவுடி சச்சின் கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
உடனே சச்சினை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.