மன்னார்குடியில் அண்ணாமலையின் பிரச்சார பொதுக்கூட்ட மேடையை போலீசாரின் உத்தரவை தொடர்ந்து, அவசர அவசரமாக பாஜகவினர் அகற்றினர்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்க மணியை எழுப்பியவர் பாஜக தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் தொடங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் என் மண், என் மக்கள் எனும் தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சார நடைபயணத்திற்கு தேரடியில் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைக்க பாஜகவினர் காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுத்தார்.
இருப்பினும், அனுமதியை மீறி பாஜகவினர் பிரச்சார பொதுக்கூட்ட மேடை அமைத்தனர். இது குறித்து தகவல் அறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மேடையை பிரிக்க பாஜகவினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் தொழிலாளர்கள் அவசர அவசரமாக மேடையை பிரித்து டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி சென்றனர். பாஜகவினர் பொதுக்கூட்ட மேடையை பிரித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.