தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரவி. இவர் நண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், மற்றொரு நண்டு வியாபாரியான டென்னிஸ் என்பவருக்கும், தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டென்னிஸ் ரவி மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ரவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து, தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இதனால், நேற்று காவல் நிலையத்திற்கு கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த ரவியை காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர் ரவியை, ‘எப்படி முன்ஜாமின் பெறலாம்..?’ என மிரட்டி அவரை அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.