தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் ரவி. இவர் நண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், மற்றொரு நண்டு வியாபாரியான டென்னிஸ் என்பவருக்கும், தொழில் போட்டி காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டென்னிஸ் ரவி மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ரவி தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தொடர்ந்து, தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இதனால், நேற்று காவல் நிலையத்திற்கு கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த ரவியை காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவர் ரவியை, ‘எப்படி முன்ஜாமின் பெறலாம்..?’ என மிரட்டி அவரை அடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.