தமிழகம்

பெண்களை வீடியோ எடுத்த காவலர்.. கோவை பஸ் ஸ்டாப்பில் அதிர்ச்சி

கோவை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பெண்களை வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்துள்ளனர். பின்னர், அந்த நபரைப் பிடித்து, எதற்காக வீடியோ எடுக்கிறாய் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் சற்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபரை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : நெருங்கும் தீபாவளி.. உச்சத்தில் காற்று மாசுபாடு.. ஆட்டம் காணும் தலைநகரம்!

தொடர்ந்து அவரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள வீடியோ குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

12 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

27 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

35 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

1 hour ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

1 hour ago

ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!

ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…

2 hours ago

This website uses cookies.