தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த மாமியார்.. மருமகன் மீது போலீசின் பார்வை.. தேனியில் பரபரப்பு!

தேனியில் வீட்டில் இருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி: தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் லீலாவதி (37) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி உள்ளது. இந்த நிலையில், லீலாவதி இன்று (டிச.19) காலை அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார், லீலாவதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேநேரம், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். போலீசாரின் இந்த முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லீலாவதியின் கணவர் சின்னச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் லீலாவதி, தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம், மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த சில காலங்களில் கௌசல்யா – பிச்சைமுத்து தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது தகராறு வரை சென்று உள்ளது.

இதையும் படிங்க: ’மிடில் கிளாஸ் மக்களே கிரெடிட் கார்டு வேண்டாம்’.. ஓட்டுநரின் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இதனால் கணவரைப் பிரிந்த கௌசல்யா, தேனியில் உள்ள தனது தாயார் லீலாவதி வீட்டில் தங்கி, ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி அல்லிநகரத்துக்கு வரும் பிச்சைமுத்து, மனைவி கௌசல்யா மற்றும் மாமியார் லீலாவதி உடன் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பிச்சைமுத்து லீலாவதியைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

10 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

11 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

11 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

11 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

12 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

13 hours ago

This website uses cookies.