தமிழகம்

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

சென்னை: சென்னையின் விருகம்பாக்கம், கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் கடந்த இரண்டு நாட்களாக பூட்டிக் கிடந்த ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, எனவே, அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள், இது குறித்து நேற்று மாலை விருகம்பாக்கம் போலீசார் மற்றும் வீட்டு உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததைப் பார்த்துள்ளனர். பின்னர், திறந்து கிடந்த பின்புறக் கதவு வழியாக போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, உள்ளே ஒருவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலாமாக கிடந்துள்ளார்.

மேலும், அவரது உடல் அழுகிய நிலையிலும், அவரைத் தாக்கப் பயன்படுத்திய கத்தியும் அவரது முகத்திலே கொடூரமாகக் கிடந்துள்ளது. அதேநேரம், அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனையடுத்து, உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை நடத்தினர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (43) என்பதும், இவர் வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார்.

இதையும் படிங்க: செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மேலும், 4 மாதங்களுக்கு முன்பு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய கார்த்திக் என்பவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளார்.

மேலும், சிவகங்கை சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கார்த்திக் மீது ஏற்கனவே 27 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசன், நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகி ஆவார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

16 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

17 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

17 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

18 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

18 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

19 hours ago

This website uses cookies.