ஆவடி திருமுல்லைவாயலில் அழுகிய நிலையில் கிடந்த தந்தை, மகள் குறித்து மருத்துவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர் (70). இவர் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில், தனது மகளுடன் திருவள்ளூர், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியே இருந்துள்ளது.
இந்த நிலையில், வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.
மேலும், அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து வந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இதன் முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு, சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவரும் உயிரிழந்துள்ளார். இதனால் அச்சமடைந்த மருத்துவர், எபனேசர் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.