தமிழகம்

சூடுபிடிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. பின்னணியில் சீனர்கள்.. நடப்பது என்ன?

டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை: சென்னை, திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம், மும்பை போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி, ‘டிஜிட்டல் அரஸ்ட்’ மோசடி நடத்தி, 88 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஒரே நாளில் 3.82 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும், அந்தப் பணத்தை 178 வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே, 178 வங்கி கணக்குகளையும் கண்டறிந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், அதை மீட்பதற்கு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அஸ்ஸாம், கவுகாத்திக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், பிரதீம் போரா உடன் இணைந்து டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தார் (25), ஸ்வராஜ் பிரதான் (22), பிரசாந்த் கிரி (21) மற்றும் பிரஞ்ரல் ஹசாரிகா (28) ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர்.

தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லி, கொல்கத்தா, கேரளா, ஜெய்ப்பூர், மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவர்கள் மூலம், பொதுமக்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: மனைவியை காரோடு எரித்துக் கொன்ற கணவர்.. நடுரோட்டில் பயங்கரம்!

மேலும், அந்தப் பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான் மற்றும் பாங்காங் ஆகிய நாடுகளில் வசிக்கும் தங்களது சீன முதலாளிகளுக்கு அனுப்பி இருப்பதும், இதற்கான கமிஷன் தொகையை இவர்கள் பெற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்- ஜனநாயகன் விஜய் கதாபாத்திரத்தின் பெயரில் உள்ள சூட்சமம்?

கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…

1 hour ago

12 ஆண்டுகள்.. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : முதலமைச்சரை சந்திக்க முடிவு!

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…

2 hours ago

பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!

காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…

2 hours ago

ஜூனியர் என்டிஆரின் கெரியருக்கு மூடு விழா? ஷூட்டிங்கையே முடக்கிப்போடும் சம்பவம்! அடப்பாவமே

உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…

2 hours ago

ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!

சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…

3 hours ago

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?

வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…

4 hours ago

This website uses cookies.