தமிழகம்

மாநகரின் மையப்பகுதியில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.. திருச்சியில் பயங்கரம்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி: திருச்சி மாநகரில் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதிகளில் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி அண்ணா சிலை பகுதி. இந்த நிலையில், இந்தப் பகுதியில் நேற்று இரவு (ஜன.17) முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயத்துடன் கிடந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெட்டப்பட்ட இளைஞர் திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தனது நண்பர்கள் லோகேஷ், சஞ்சய், ராம் ஆகியோருடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சியை பார்க்க வந்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் இருந்து சிந்தாமணி அண்ணா சிலை பகுதிக்கு நான்கு பேரும் வந்தபோது, மர்ம கும்பல் அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளனர்.

இதையும் படிங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!

இதில், முத்துக்குமார் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முத்துக்குமாரிடம் விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக தன்னை வெட்டியதாக தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோட்டை போலீசார், முத்துக்குமாரை வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.