பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை நிமித்தமாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.பின்னர் வேலை முடிந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனடியாக இது குறித்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பைக் திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் வாகனத்தை திருடியவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடு போன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆவடி குற்றபிரிவை சேர்ந்த காவலர் ஹரிதாஸ் என்பவர் சம்பந்தபட்ட புகார்தார் பெண்ணை தொடர்புகொண்டு திருடு போன வாகனம் கிடைத்து விட்டது,வாகனத்தை பெற்றுக்கொள்ள வரும்படி அழைத்துள்ளார்.
மேலும் இதற்காக 15000 ரூபாய் பணமும் கேட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அப்பெண் போலீசாரிடம் 15000 கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என பேரம் பேசி,5000 ரூபாய் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.இதனை பெற்றுக்கொள்ள காவலர் ஹரிதாஸ் அப்பெண்ணை தொடர்பு கொண்டு நேரில் அழைத்துள்ளார்.
மேலும் 2000 ரூபாயை பெற்றுக்கொண்ட காவலர் மீண்டும் தொடர்பு கொண்டு மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை கண்டுபிடித்துள்ளோம் என தொடர்ந்து பேச்சு கொடுத்த காவலர் உன்மீது எனக்கு ஆசையாக உள்ளது,என்னுடன் தனிமையில் நீ இருக்க வேண்டும் உனக்காக அறை எடுத்துள்ளேன் என கூறி ஆவடியில் உள்ள நீச்சல் குளம்,பார் வசதி உள்ள பிரபல விடுதியான பிரீத்தா கார்டனுக்கு அழைத்துள்ளார்.
இதனை கேட்ட அப்பெண் அதிர்ந்துள்ளர்.இது குறித்து தனது அண்ணனிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்ணின் அண்ணன் தகாத முறையில் நடந்துகொண்ட காவலர் ஹரி தாஸை விடுதியில் வைத்து கையும் களவுமாகப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து விடுதி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தகாத முறையில் நடக்க முயன்ற போலீசாரை மீட்டு அங்கிருந்து காவல்நிலையம் அழைத்து சென்று பத்திரப்படுத்தி வைத்தனர்.
இதனையடுத்து பாதிக்கபட்ட பெண் மற்றும் அவரது அண்ணன் ஆவடி காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் காவலர் ஹரிதாசிடம் விசாரணை நடத்தி பின்னர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் ஹரிதாஸ் மீது வழக்கு பதிய உத்தரவிட்டார். இதனை அடுத்து காவலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.