தமிழகம்

போதும் என்றளவில் போலீஸ் கட்டுப்பாடு.. பரந்தூரில் விஜய்க்கு கிடுக்குப்பிடி!

பரந்தூருக்கு வரவுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், குறிப்பிட்ட நேரத்தில் தான் மக்களை சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை, வருகிற 20ஆம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, விஜய் வருகையை ஒட்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து அக்கட்சியினர் தீவிர கள ஆய்வில் இறங்கியுள்ளனர்.

மேலும், இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் கூறுகையில், “விஜய் வருகிற 20ஆம் தேதி பரந்தூர் வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எந்த இடத்தில் மக்களைச் சந்தித்து பேசுகிறார் என்பது குறித்து இன்று தெரிவிப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்” என்றார்.

இந்த நிலையில், விஜய் மக்களைச் சந்திப்பதில், காவல்துறை தரப்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, “அனுமதி அளித்த இடத்தில் மட்டும்தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டம் கூட்டாமல், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் அவர்கள் வர வேண்டும்.

இதையும் படிங்க: பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

எந்த இடத்தில் விஜய் மக்களைச் சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும். அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்” ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய விஜய், தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரத்தில் நடத்தினார். அப்போது, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படாது என்ற தீர்மானத்தையும் அவர் முன்மொழிந்தார். ஆனால், அதற்குப் பிறகு எந்த பேச்சும் இல்லை.

அதேநேரம், களத்திற்கு வராமலே விஜய் அறிக்கை பாணியில் அரசியலைத் தொடங்கிவிட்டார் எனவும் கருத்துக்கள் நிலவின. இந்த நிலையில் தான், முதன்முதலாக நேரடியாக களத்திற்குச் சென்று விஜய் மக்களைச் சந்திக்க இருக்கிறார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.