ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது இன்று அதிகாலை நேரத்தில், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அப்போது, காவல் நிலையத்தின் நுழைவாயில் இரும்பு கேட் மூடப்பட்டிருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் பரபரப்புக்கு உள்ளாகி, எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார், காவல் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த தனிப்படை போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காவேரிப்பாக்கம் அருகே போலீசார் தனிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஹரி என்பவரை போலீசார் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அவர், காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய பார்க்கனும்’.. 4வது மாடியில் நின்று மிரட்டல்.. காவலர் காயம்.. சென்னையில் பரபரப்பு!
இதனையடுத்து, தப்பி ஓடிய ஹரியை போலீசார் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து, ஹரியால் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரனுக்கும், காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயம் அடைந்த ஹரி ஆகிய இருவருக்கும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.