தமிழகம்

மறுத்த கோர்ட்.. பறந்த கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு!

நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மதுரை: சென்னையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்கள் மற்றும் திராவிடர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.12) இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்டை மாநிலத்துடன் பிரச்னை ஏற்படும் வகையில், நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவ.14) காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுத் தரப்பு முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்து தீர்ப்பு அளித்தார்.

இதையும் படிங்க: ரஜினியை பந்தாடிய லைக்கா..இனி உங்க சகவாசமே வேணாம் டா சாமி ..!

இதனிடையே, தன்னை போலீசார் தேடுவதை அறிந்த நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளார். மேலும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து கஸ்தூரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் நடிகை கஸ்தூரி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதும் உறுதியாகி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.