தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு காவல் நிலையம் விஸ்வநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் விற்பனை தொடர்பாக வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வரக்கூடிய வேளையில், வழக்கில் தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், கடந்த மாதம் கேகே நகர் பகுதியில் 5 கோடி மதிப்பில் மெத்தெபெட்டமைன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிமும் அன்சாரி என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!!
கடந்த 12 ஆம் தேதி இரவு 11.37 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகனத்தில் தீயை பற்ற வைத்த நிலையில், வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதைத் தொடர்ந்து, இரவு 11.41மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற மேத்தா என்பது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
This website uses cookies.