தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு தீ வைத்த மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு காவல் நிலையம் விஸ்வநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் விற்பனை தொடர்பாக வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வரக்கூடிய வேளையில், வழக்கில் தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், கடந்த மாதம் கேகே நகர் பகுதியில் 5 கோடி மதிப்பில் மெத்தெபெட்டமைன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிமும் அன்சாரி என்பவரை கைது செய்து, அவர் வைத்திருந்த இரண்டு பைக்குகளை பறிமுதல் செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: இளம்பெண்ணை மிரட்டி உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம் ; 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது!!
கடந்த 12 ஆம் தேதி இரவு 11.37 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் காவல் நிலைய வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகனத்தில் தீயை பற்ற வைத்த நிலையில், வாகனம் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதைத் தொடர்ந்து, இரவு 11.41மணி அளவில் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லக்கூடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற மேத்தா என்பது தெரிய வந்த நிலையில் அவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.