பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் வழக்கமான ரோந்து பணியை பழனி தாராபுரம் சாலையில் மேற்கொண்டுள்ளார். அப்போது, கோயில் ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளார்.
பழனி கோயிலில் பணிபுரிவதாக கூறியதை அடுத்து, காவலர் பிரபு, பழனி கோயிலுக்கு போலீசார் வரும்போது அனுமதிப்பதில்லை, அடையாள அட்டை கேட்டு சோதனை செய்கிறீர்கள் எனவும், கோயில் இணை ஆணையர் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.
மேலும், கோயிலில் பணிபுரிபவர்கள் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்தவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.