Categories: தமிழகம்

‘உன் கூட *****.. நான் சொல்ற இடத்துக்கு தனியா வா’ : கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய காவலர்.. தனிமையை தேடியவருக்கு தர்ம அடி!!

திருப்பூர் : செல்போன் மூலம் கல்லூரி மாணவியை தனிமைக்கு அழைத்த காவலரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்த நிலையில் காவலரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலருடன் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுப்பிரமணி (வயது 38) இருவரிடமும் விசாரணை செய்து அலைபேசி எண்ணை பெற்றுள்ளார். நேற்று பெண்ணின் எண்ணுக்கு அழைத்த காவலர், மாணவியை தனியாக வருமாறு அழைத்துள்ளார்.

இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலர் கூறிய இடத்திற்கு சென்று அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் சுப்பிரமணி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் காவலர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க வேண்டிய காவலர்களே பெண்ணிடம் அநாகரீகாமாக நடந்து கொண்டு பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

10 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

11 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

11 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

11 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

13 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

13 hours ago

This website uses cookies.