கோயம்பேடு போக்குவரத்து போலீசில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் இவர் மாங்காடு அடுத்த மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால் முதல் மனைவி உடன் விவாகரத்து ஆனது இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது
இதையும் படியுங்க: அதிர்ச்சியில் நடிகை மீனா… மனோஜ் மறைவு குறித்து திடீரென போட்ட பதிவு!
இதில் ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆனந்த் குடித்துவிட்டு குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வது வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைப்பது குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவத்தில் ஈடுபட்டதால் மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் நிபந்தனை ஜாமினில் வந்த ஆனந்த் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து விட்டு வந்த நிலையில் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆனந்த் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் போரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியது உறுதியான நிலையில் போலீஸ்காரர் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணால் குடித்துவிட்டு தகராறு செய்து சிறையில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் திருமணம் செய்ய மறுத்ததால் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பி தற்போது மீண்டும் கைதான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.