தமிழகம்

கதவை திறந்து பார்த்த பெற்றோர்… சடலமாக கிடந்த +2 மாணவி : பொள்ளாச்சியில் பகீர்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள MGR நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் என்பவரது மகள் சரிகா. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சரிகா கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சரிகா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படியுங்க: காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற காதலி.. 35 இடங்களில்.. இச்சையை தீர்த்து வெறிச்செயல்..!!

சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் சரிகாவுக்கும் காதலித்து வரும் காதலனுக்கும் இடையே தொலைபேசியில் சண்டை போட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

காதலன் யார் என்பதை கண்டறிய மாணவி பயன்படுத்த தொலைபேசியை பறிமுதல் செய்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் பொள்ளாச்சி பகுதியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

லியோ படத்தில் 35 லட்சம் முறைகேடு? நடன இயக்குனர் தினேஷை கட்டம் கட்டும் டான்சர்கள்?

தேசிய விருது வாங்கிய நடன இயக்குனர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர்தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்.…

31 minutes ago

கோவில் திருவிழாவுக்கு கூட்டம் கூடுவது, நாகரிக சமுதாயத்துக்கு நல்லதல்ல.. அமைச்சர் சர்ச்சை பேச்சு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 9 கோடி மதிப்பிலான களியக்காவிளை பேருந்து நிலையம் மற்றும் 14.55 கோடி மதிப்பில் மார்த்தாண்டம்…

44 minutes ago

செக்க சிவந்த வானம், ஜில்லா; இந்த ரெண்டையும் கலந்தால்?- தக் லைஃப் படத்தின் விமர்சனம் இதோ!

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் “நாயகன்” திரைப்படத்தை அடுத்து 38 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள “தக் லைஃப்”…

3 hours ago

முருக பக்தர் மாநாட்டுக்கு வரும் விஜய் : அப்போ கூட்டணி உறுதி? நயினார் நாகேந்திரன் தகவல்..!!

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசியதாவது,…

3 hours ago

ஓடி, ஓடி ஏழைகளுக்கு உதவி செய்வா.. RCB கூட்ட நெரிசலில் இறந்த இளம்பெண்ணின் உடலை பார்த்து கதறிய சொந்தங்கள்!

பெங்களூரு ஆர்.சி.பி வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் உடுமலை மைவாடி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூர்த்தியின் மகளான மென்பொருள் பொறியாளர்…

3 hours ago

சிறை சென்றவனே தலைவன்… அன்புமணியை புறக்கணித்து பாமகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

பாமகவில் சமீபகாலமாக தந்தை மகன் மோதல் முற்றி வருகிறது. ராமதாஸ்க்கு எதிராக அன்புமணி செய்லபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்க:…

4 hours ago

This website uses cookies.