பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறை வெள்ளிமலை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக அரசு பேருந்து வந்துள்ளது. வரும் வழியில் அரசு பேருந்தில் பிரேக் செயல் இழந்ததால் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி சென்றது.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வந்த அரசு பேருந்து எதிரே வரும்போது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேருந்திலும் பயணம் செய்த பயணிகளுக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் என 20க்கும் மேற்பட்டவர்கள் காயங்கள் ஏற்பட்டது.
பின்பு அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதில் ஆறு பயணிகளுக்கு காயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளதால் வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.