தமிழக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது என புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது :- கூட்டாட்சி தத்துவத்தை பற்றி அடிக்கடி கூறும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தனது கூட்டணி கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமல் தற்போது கூட்டாச்சியை பற்றி பேசுவது அழகல்ல. உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
ஆன்மீக பூமியான புதுச்சேரிக்கு சுற்றுலா என்ற பேரில் வரக்கூடியவர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை அரசு விதிக்கவேண்டும். புதுச்சேரியில் உள்ள ஆலயங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மேலும் இதனை ஒரு சட்டமாக புதுச்சேரி அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், முன்னாள் தமிழக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழிக்கவும், முடியாது அடக்கவும் முடியாது, என அவர் தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.