புதுச்சேரியில் ஹோட்டல் ஊழியரின் இருசக்கர வாகனம் திருடி சென்ற டிப்-டாப் நபரை போலிசார் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மரைன் விதியில் உள்ள வட இந்தியர் உணவகம் ஒன்றில் பணிபுரிபவர் மோகன் ராஜ். இவர் கடந்த 29 ஆம் தேதி மதியம் தனது இருசக்கர வாகனத்தை உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு, பின்னர் இரவு வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அவர் இது குறித்து பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் டிப்-டாப் உடை அணிந்த நபர் ஒருவர் மோகன்ராஜின் இருசக்கர வாகனத்தை தள்ளி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, அந்த நபர் யார் என்பது குறித்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.