புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலாவினர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் பயணிகள் படகு சேவை இன்று தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் விரும்பும் புதுச்சேரியின் பல்வேறு கடற்கரைகளை கடலில் இருந்து பார்க்கும் வகையில் படகு சேவை திட்டம் தொடங்கியது. அதன்படி, முதல்முறையாக சொகுசு படகு மூலம் பயணிகளை அழைத்துக்கொண்டு கடலில் இருந்து புதுச்சேரி நகரின் அழகை காணும் வகையில், முதல் சொகுசு படகு பயணம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
படகில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள். புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த படகில் பயணிக்க ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இந்த படகு புதுச்சேரியின் பாரம்பரிய கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீளம், ரூபி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை 3 மணி நேரம் பயணித்து சுற்றுலாவினர்கள் அதன் அழகை காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை மாலை என இரண்டு தடவை இயக்கப்படும் இந்த படகில் பயணிக்க முன் பதிவு அவசியமாகின்றது. வார இறுதி நாட்களில் பல்வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்களுக்கு இந்த படகு பயணம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.