புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் மற்றும் பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து பெரியகடை காவல்நிலைய போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்ற வாலிபர் போலி டீத்தூள், சலவை பவுடர், பெருங்காயத்தூள் உள்ளிட்ட பொருட்களை புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள போலி டீத்தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.