புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் சப்ளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனத்தின் பேரில் போலியாக டீத்தூள், சலவை பவுடர் மற்றும் பெருங்காயத்தூள் விற்பனை செய்யப்படுவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி டீத்தூள் மற்றும் சலவை பவுடரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து பெரியகடை காவல்நிலைய போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் (38) என்ற வாலிபர் போலி டீத்தூள், சலவை பவுடர், பெருங்காயத்தூள் உள்ளிட்ட பொருட்களை புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள போலி டீத்தூள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.