புதுச்சேரியில் நள்ளிரவில் நடைபாதை வியாபாரிகள் காவல் நிலைய வாசலில் கற்கலை வீசி மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா (31). இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பூ விற்று வருகிறார். இதே போல் உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வள்ளி (46). இவர், சோளம் விற்பனை செய்கிறார், இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாக
கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு கவுசல்யா, வள்ளி இருவரும் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதை அறிந்த வள்ளிக்கு ஆதரவாக அவரது மகன் துளசி (25) மற்றும் சில வாலிபர்களும், கவுசல்யாவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் நாராயணன் (34) மற்றும் சில வாலிபர்கள் வந்தனர். இரு தரப்பும் மணக்குள விநாயகர் கோவில் அருகே மோதி கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி வீசினர்.
இரு தரப்பில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட பெரியக்கடை போலீஸ் நிலையம் சென்றனர். காவல் நிலையத்தில் 2 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், இரு தரப்பும் போலீஸ் நிலையம் எதிரே கற்கலை வீசி தாக்கி கொண்டனர். இதில், துளசியின் மண்டை உடைந்தது. போலீஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட இரு தரப்பும் மீண்டும் மோதி கொண்டது.
போலீஸ் நிலைய பூ ஜாடிகளை துாக்கி வீசியது. சாலையோரம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளி விட்டனர். இதனால் பெரியக்கடை காவல் நிலையம் கலவர பகுதியாக மாறியது. பணியில் இருந்த 2 போலீசாரால் தடுக்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ்சாலை காவல் நிலையை ஆய்வாளர் மனோஜ் மற்றும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை துரத்தினர். காயமடைந்த துளசி, வள்ளி, அபி, நாராயணன், கவுசல்யா உட்பட 6 பேர் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் நிலைய வாசலில் இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் இரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.