புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
புதுச்சேரி ஏம்பளம் பகுதியை சேர்ந்தவர் தேவா (26). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. செல்போன் டவர் மெக்கானிகான இவரது வீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக குடும்ப சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமான பிரச்சினை நடைபெற்று வருவதாகவும், இதற்கான சட்ட பணிகளை பெண் வழக்கறிஞர் ஒருவர் செய்து வருவதும், அவர் தேவாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தேவா நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறி கொண்டு, தன்னை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய பெண் வழக்கறிஞர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் தாம் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.
இதனால் அங்கு ஒன்று கூடிய ஊர் மக்கள், தேவாவை டவரில் இருந்து கீழே இறங்க சொல்லியும் அவர் இறங்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து மங்களம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தேவாவிடம் கீழே வந்தால் தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் என லாவகமாக பேசி, அவரை செல்போன் டவரில் இருந்து கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
நள்ளிரவில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.