புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள், சமையலறைக்குள் புகுந்து உணவுகளை ருசி பார்த்து வருகின்றன.
புதுச்சேரி வாணரப்பேட்டை அருகே தாவரவியல் பூங்கா உள்ளது. இங்க பல ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மரங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்த மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இவற்றுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில், தற்போது அவை குடியிருப்புகளை நோக்கி வர துவங்கி உள்ளன.
கடந்த சில நாட்களாக வானரப்பேட்டை பகுதியில் உள்ள ஆலய வீதி ராஜராஜன் வீதி, கல்லறை வீதி, தமிழ் தாய் நகர், போன்ற பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. வீட்டில் உள்ள சமையல் அறையில் புகுந்து பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சூறையாடி உடன் தேவையான உணவுகளும் எடுத்துச் சென்று ருசி பார்த்து வருகிறது.
மேலும், இரவு பகல் பார்க்காமல் எந்த நேரமும் குரங்குகள் குடியிருப்புகளில் புகுந்து வீட்டில் வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மதிய உணவை பையோடு எடுத்துச் செல்வதால் மாணவர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.