புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் உண்ணாமலை (75) என்ற மூதாட்டி தனியே வசித்து வந்தார். செல்வந்தரான மூதாட்டி உண்ணமாலை கணவனை இழந்த நிலையில், தனியே வசித்து வந்தார். வழக்கமாக வெளியே வந்து செல்லும் மூதாட்டி நேற்று இரவு முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் இரவு வீட்டில் சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மூதாட்டி வீட்டில் வைத்து இருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகவல் தெரியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.