புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் உண்ணாமலை (75) என்ற மூதாட்டி தனியே வசித்து வந்தார். செல்வந்தரான மூதாட்டி உண்ணமாலை கணவனை இழந்த நிலையில், தனியே வசித்து வந்தார். வழக்கமாக வெளியே வந்து செல்லும் மூதாட்டி நேற்று இரவு முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் இரவு வீட்டில் சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மூதாட்டி வீட்டில் வைத்து இருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகவல் தெரியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.