புதுச்சேரியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த சேதராப்பட்டு பகுதியில் உண்ணாமலை (75) என்ற மூதாட்டி தனியே வசித்து வந்தார். செல்வந்தரான மூதாட்டி உண்ணமாலை கணவனை இழந்த நிலையில், தனியே வசித்து வந்தார். வழக்கமாக வெளியே வந்து செல்லும் மூதாட்டி நேற்று இரவு முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் இரவு வீட்டில் சென்று பார்த்தபோது, மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக சேதராப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மூதாட்டி வீட்டில் வைத்து இருந்த நகைகள் காணாமல் போனதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வயது மூப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து பிரேதபரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகவல் தெரியும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.