புதுச்சேரியில் நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் லஷ்மி எனும் கோவில் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடைபயிற்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர்.
இந்த யானை லட்சுமி புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்து வரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது. பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது. கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், லட்சுமியின் பிரிவை தாங்க முடியாமல் பாகன் சக்திவேல், கதறி அழும் காட்சிகள் பார்ப்போரின் கண்ணில் நீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.
இதனிடையே, நடைபயிற்சியின் போது உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானையின் கடைசி நிமிட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.