உடலுறவுக்கு அழைத்த 64 வயது மூதாட்டி.. கதற கதற வன்புணர்வில் ஈடுபட்ட 36 வயது நபர் : போலீசுக்கு வந்த விநோத புகார்!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 8:00 pm
Quick Share

புதுச்சேரி ; விருப்பப்பட்டு உடலுறவில் ஈடுபட்ட போது, 36 வயது இளைஞர் அத்துமீறி நடந்து கொண்டதாக 64 வயது வெளிநாட்டு மூதாட்டி போலீசியல் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்கா நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் பேட்ரிசியா போல்ட்ஸ் (64). இவர் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க குடியுரிமை உள்ள இவர், இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு வந்து அவர் சுற்றி பார்த்துள்ளார்.

அப்போது, புதுச்சேரி வந்தபோது புஸ்ஸி வீதியில் பெண்களுக்கான அழகு சாதனக்கடை நடத்தி வரும் வட இந்திய இளைஞர் மேக்ராஜ் பட்வுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகினர். இச்சூழலில் தமிழகம் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் பேட்ரிசியா போல்ட்ஸ் வந்தார். அவர் சுய்ப்ரேன் வீதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

அங்கு தனது நண்பர் மேக்ராஜ் பட்டை அழைத்தார். இருவரும் விருப்பப்பட்டு உல்லாசத்தில் ஈடுபட்டனர். உறவின்போது, தனக்கு வலி ஏற்பட்டதாக அமெரிக்க மூதாட்டி குறிப்பிட்டு நிறுத்தக் கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து வலுக்கட்டாயமாக மேக்ராஜ் பட் உல்லாசத்தில் ஈடுபட்டு சென்றுவிட்டார்.

ஆனால், தொடர்ந்து பிறப்புறுப்பின் வலியால் அமெரிக்க மூதாட்டி அவதியடைந்ததால், மேக்ராஜ் பட்டை தொடர்பு கொண்டு மருத்துவரிடம் அழைத்து செல்ல கூறினார். அதற்கு அவர் மறுத்து விட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் விசாரித்தபோது நடந்ததைக் கூறியதால் ஒதியஞ்சாலை போலீஸாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி விருப்பப்பட்டு இணைந்தாலும், நிறுத்தக்கூறிய போது, வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டதால் மேக்ராஜ் பட் மீது பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேக்ராஜ் பட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 1160

0

0