வேலூர் அருகே அனுமதியின்றி நடந்த எருது விழா பங்கேற்று ஓடிய 200- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், மாடு முட்டியதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பட்டிகையையொட்டி வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு மற்றும் கோவிந்தரெட்டிபாளையத்தில் எருதுவிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இரண்டு இடங்களிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. எருது விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் எருது விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று மனித உயிருக்கோ அல்லது முழு ஊனத்திற்கோ இழப்பீடு வழங்கும் வகையில் விழாக் குழுவினர் காப்பீடு செய்திருக்க வேண்டும்.
அப்படி காப்பீடு செய்திருந்தால் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும் என்ற விதி உள்ள நிலையில், தற்போது நடைபெற்ற கீழ் அரசம்பட்டு மற்றும் கோவிந்தரெட்டி பாளையம் ஆகிய இரண்டு இடங்கள் காப்பீடு செய்யாததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அனுமதியை மீறி எருது விடும் விழா நடைபெற்றது.
கோவிந்தரெட்டிபாளையத்தில் அனுமதியின்றி நடைபெற்ற எருது விடும் விழாவில் காளை முட்டியதில் சுப்பிரமணி என்பவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கீழரசம்பட்டில் நடைபெற்ற விழாவில் ஒரு காலை மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.