வேலூர் : வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செய்த செயல் பேசு பொருளாகி வருகிறது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக அரிசி பெரும் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க உத்தரவிட்ட நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் நான்கு லட்சத்து 49 ஆயிரத்து 584 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்டத்திலுள்ள 485 முழு நேர மற்றும் 221 பகுதி நேர ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 706 ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதனை தொரப்பாடி பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மூதாட்டி ஒருவர் தனது ரேஷன் அட்டையை தனது மகன் எடுத்து வைத்திருப்பதாகவும், எனக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மூதாட்டியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டு, அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.