விழுப்புரம் : பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஒருவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த அரசாலபுரம் கிராமத்தை சார்ந்த பூசாரியான ரகுராமன் அப்பகுதியில் உள்ள மலையில் உள்ள பாறைகளை அப்பகுதியை சார்ந்தவர்கள் உரிமம் பெறாமல் உடைத்து வருவது தொடர்பாக கூறி பலமுறை புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் இது தொடர்பாக புகார் அளித்தால் கொன்றுவிடுவேன் என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு மிரட்டுவதாக கூறியும், பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென பூசனிக்காய்க்கு மஞ்சள், விபூதி, சிகப்பினை தூவி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்தார்.
இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாமியாரை அப்புறப்படுத்த அவரிடமிருந்த மனுவை பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர்.
திடீரென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜையில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.