பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி மீடு புகார் கொடுத்த தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள ஜானகி அவென்யூவில் வசிக்கிறார். இவரது கணவர் பெயர் ராகுல் ரவீந்திரன். இந்த நிலையில் தான் பாடகி சின்மயி, சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதில் அவரது கணவர் நடத்தி வரும் நிறுவனத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கும் வகையில் ஒரு நபர் ஈடுபட்டு வருவதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மனுவில் அவர் கூறியதாவது, நானும் எனது கணவரும் போட்டோ ஷூட் கம்பெனி நடத்தி வருகிறோம். எங்களது கம்பெனி பெயரை பயன்படுத்தி, குறிப்பிட்ட செல்போன் நம்பரில் இருந்து, பெண் குழந்தைகளின் படத்தை தவறாக சித்தரித்து ஒருவர் வெளியிட்டு வருகிறார். இது எங்கள் கம்பெனியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.