தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!
தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் காணவில்லை என தெரிவித்து வால் போஸ்டர்கள் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வால்போஸ்டரில் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில், எங்கள் தொகுதி எம்பி-யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்கள் பலர் பலவிதமாக பேசும் ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளன.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.