தருமபுரி திமுக எம்பிக்கு எதிராக போஸ்டர்.. கண்டா வரச் சொல்லுங்க என ஒட்டியதால் மீண்டும் பரபரப்பு!!
தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம், மேட்டூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நகர பகுதிகளில் உள்ள பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் காணவில்லை என தெரிவித்து வால் போஸ்டர்கள் மர்ம நபர்களால் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த வால்போஸ்டரில் கண்டா வர சொல்லுங்க என்ற தலைப்பில், எங்கள் தொகுதி எம்பி-யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்காளர் பெருமக்கள் பலர் பலவிதமாக பேசும் ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.