மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என கோவை மாவட்ட பாஜக தலைவர் எச்சரித்துள்ளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டிய பொழுது 10 நாட்களுக்குள் கோவை மாநகரில் உள்ள அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வந்ததாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் உயர் நீதிமன்ற ஆணையை கொண்டு கோவிலை மட்டும் இடிக்கக்கூடிய இந்த அரசு ஏன் இந்த போஸ்டர் விவகாரத்தில் அதனை பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
நேற்று பாஜக சார்பில் சுதந்திர தின விழா குறித்து போஸ்டர் ஒட்டச் சென்றபோது திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இன்று இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து போஸ்டர்களையும் இன்று இரவு அகற்றுவோம் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.