தமிழகம்

வீட்டிலே பிரசவம் பார்ப்பதற்கு வாட்ஸ்ஆப் குழு.. மருத்துவத்துறையை உலுக்கிய சென்னை சம்பவம்!

சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை மாவட்டம், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 3வது குழந்தைக்கு சுகன்யா கர்ப்பம் தரித்து உள்ளார்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாத சுகன்யாவுக்கு, வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து உள்ளது. மேலும், சுகன்யாவுக்கு அவரது கணவர் மனோகரனே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் குழு மூலம் பிரசவம்: இந்த அதிர்ச்சிகரமான தகவல் வாட்ஸ்ஆப் மூலம் பரவத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் வாட்ஸ்ஆப் தகவலை அடிப்படையாகக் கொண்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

அப்போது, மனோகரனின் செல்போனை வாங்கி போலீசார் சோதனை செய்து உள்ளனர். அதில், ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு ஒன்று இருந்து உள்ளது. ஆயிரத்து 24 உறுப்பினர்களோடு செயல்படும் இந்தக் குழுவில் வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்கள் அதிக அளவில் பகிரப்பட்டு இருந்ததும் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

இதையும் படிங்க: ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு.. பட்டப்பகலில் கொடூரம்!

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மனோகரன், தனது மனைவி சுகன்யாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதேநேரம், தாயும் சேயும் நலம் உடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும், இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

குறிப்பு: இந்தச் செய்தி பல்வேறு செய்தி ஊடக தளங்களில் இருந்து திரட்டப்பட்டவையே. எந்தவொரு நோய்க்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பெயரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Hariharasudhan R

Recent Posts

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

33 minutes ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

15 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

16 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

17 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

18 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

18 hours ago

This website uses cookies.