தமிழகம்

வீட்டிலே பிரசவம் பார்ப்பதற்கு வாட்ஸ்ஆப் குழு.. மருத்துவத்துறையை உலுக்கிய சென்னை சம்பவம்!

சென்னையில் வாட்ஸ்ஆப் மூலம் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை மாவட்டம், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மனோகரன். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 3வது குழந்தைக்கு சுகன்யா கர்ப்பம் தரித்து உள்ளார்.

இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாத சுகன்யாவுக்கு, வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து உள்ளது. மேலும், சுகன்யாவுக்கு அவரது கணவர் மனோகரனே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் குழு மூலம் பிரசவம்: இந்த அதிர்ச்சிகரமான தகவல் வாட்ஸ்ஆப் மூலம் பரவத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் ஒருவர் வாட்ஸ்ஆப் தகவலை அடிப்படையாகக் கொண்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

அப்போது, மனோகரனின் செல்போனை வாங்கி போலீசார் சோதனை செய்து உள்ளனர். அதில், ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குழு ஒன்று இருந்து உள்ளது. ஆயிரத்து 24 உறுப்பினர்களோடு செயல்படும் இந்தக் குழுவில் வீட்டில் பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்கள் அதிக அளவில் பகிரப்பட்டு இருந்ததும் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

இதையும் படிங்க: ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட அரிவாள் வெட்டு.. பட்டப்பகலில் கொடூரம்!

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மனோகரன், தனது மனைவி சுகன்யாவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அதேநேரம், தாயும் சேயும் நலம் உடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இருப்பினும், இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

குறிப்பு: இந்தச் செய்தி பல்வேறு செய்தி ஊடக தளங்களில் இருந்து திரட்டப்பட்டவையே. எந்தவொரு நோய்க்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரை அணுகி, அவரது பரிந்துரையின் பெயரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

16 minutes ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

2 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

2 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

3 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

3 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

4 hours ago

This website uses cookies.