கருவுற்ற பெண் யானை… நடுக்காட்டில் இருந்து வந்த துர்நாற்றம் : கோவையில் மீண்டும் சோகம்!!
கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம், நரசிபுரம் பிரிவு, கழுதை ரோடு சராக பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கோவை வனக் கோட்டம் உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார், போளுவாம்பட்டி வனச் சராக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள், “CWCT” தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கோவை வன மண்டலம் ஆனைமலை புலிகள் காப்பகம் வன கால்நடை மருத்துவர் சுகுமார், நரசிபுரம் உதவி கால்நடை மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் இறந்த பெண் யானையின் மீது உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவர் இறந்த பெண் யானையின் வயது 22 முதல் 25 இருக்கலாம் எனவும் மேற்படி யானை இறந்து 2 நாட்கள் இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தார்.
இறப்பிற்கான காரணம் யானையின் கர்ப்பப்பையில் 20 முதல் 22 மாதமுடைய ஆண் சிசு இருந்தது. யானையின் சினைப்பை கால பிரச்சினை காரணமாக பெண் யானை இறந்து இருக்கலாம் என மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.