கோவை வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26). இவரது கணவர் சிலம்பரசன். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மணிமேகலைக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது கணவர் காரமடை பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் மணிமேகலையை ஏற்றி பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புறப்பட்டனர்.
அப்போது வீரபாண்டி பகுதியில் போகும்போது பனிக்குடம் உடைந்து ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன் மற்றும் பைலட் சங்கர் கணேசன் ஆகியோர் மணிமேகலைக்கு முதல் உதவி செய்தனர்.
தற்போது தாய் மற்றும் சேய் வீரபாண்டி புதூர் பகுதியில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் நலமாக உள்ளனர். பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.