திண்டுக்கல் ; பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (24). திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெனாசீர் சித்திக்காவின் தாயார் அரக்காஸ் அம்மாள் கூறியபோது :- எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை எனது மகளை சந்தித்தபோது மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு மாமனார், மாமியார் தொந்தரவு செய்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தோம். மாமனாருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டால் தனது மகளை கால்களை அழுத்தி விடச்சொல்லி டார்ச்சர் செய்ததாக அடிக்கடி என் மகள் கூறிவந்தார். இந்நிலையில் மருமகனின் உறவினரான பரிதா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சில விஷயங்கள் பேசுவதாக கூறி சாகுல் அமீதை தனியாக அழைத்து சென்று பேசுவதும், இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிக்கொண்டே வந்தார்.
இந்நிலையில் எனது மகள் நேற்று இரவு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். என் மகள் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மாமனார், மாமியார், மருமகன் மூன்று பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்.என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
This website uses cookies.