Categories: தமிழகம்

தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!!

தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!!

தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மாநகர பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக தண்ணீரி மூழ்கி உள்ளதால் அங்கு வரக்கூடிய நோயாளிகள் பெரும் அவதியடைந்து உள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியவோ அல்லது உள்ளையோ செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு ரப்பர் படகுகள் மூலம் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து உள்ளேயும் வெளியேயும் அழைத்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளகாடு பகுதியை சார்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி கற்பகவள்ளி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதனால் நேற்று மாலை அவருக்கு திடிரென பிரசவ வழி எடுத்து வழியால் துடித்தார். இதனை கண்ட அங்கிருந்த திருநங்கைகள் சிலர் உடனடியாக கற்பகவல்லியை ஒரு குட்டி யானை வாகனத்தில் அழைத்துகொண்டு வேகமாக ஊருக்குள் தேங்கி உள்ள மழை நீரை கடந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

அங்கு மழை நீர் குளம்போல் தேங்கி இருந்ததை கண்டு உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர் அப்போது கற்பகவள்ளி-க்கு வலி அதிகமாக எடுத்து குட்டியானை வாகத்தில் வைத்தே குழந்தை பிறந்தது.

உடனடியாக மருத்துவமனை உள்ளே இருந்து வந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் குட்டியானை-யில் பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் இருந்த கர்பகவள்ளியை மீட்டு ரப்பர் படகு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் அனுப்பி வைத்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் தாய் சேய் உயிரை காப்பாற்றிய திருநங்கைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.