Categories: தமிழகம்

நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி… விமான நிலைய முனையம்… ரூ.19,850 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல்!!!

நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி… விமான நிலைய முனையம்… ரூ.19,850 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல்!!!

திருச்சி விமான நிலையத் திறப்பு மற்றும் ரூபாய்19,850 கோடிக்காண வளர்ச்சி திட்டங்கள் அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.

திருச்சி சர்வதேச விமான 2019ஆம் ஆண்டு தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்தது முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவுற்றது.

இந்த புதிய விமான நிலையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2அடுக்குகளைக் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாஸ ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தைத் திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.

தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியிலிருந்து
தனி விமானத்தில் பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 10மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி உரையாற்றுகிறார்.

பின்னர் 12மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு ரூபாய் 19,850 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சியிலிருந்து லட்சத்தீவிற்கு புறப்பட்டுச் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். திருச்சி டிவிஎஸ் சுங்கச்சாவடி முதல், விமானம் நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 8,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும், விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படையினர் சுமார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி) அதிகாரிகள் 30பேர் திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பிரதமரின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இரு இடங்களிலும் 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வருகை அன்று 5அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமான நிலையம் பகுதியில் உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.