நீதிமன்றத்துக்குள் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பியோடிய கைதி : கஞ்சா குற்றவாளியால் பரபரப்பு!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் குருமாறன் வயது 23. இவர் மீது கஞ்சா விற்பனை செய்தல் உள்ளிட்ட ஏழு வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகே காவல்துறையினருக்கு குருமாறன் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததையடுத்து அவரை திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி உள்ளனர்.
அப்பொழுது நீதிபதி அவருக்கான நீதிமன்ற காவல் குறித்து படித்துக் கொண்டிருக்கும் பொழுது நீதிமன்றத்தில் இருந்து குருமாறன் தப்பி ஓடி உள்ளான். உடனடியாக அருகில் இருந்த காவல்துறையினர்கள் அவனைப் பிடிக்க முயன்ற பொழுது அவர்களை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து குருமாரன் தப்பிச் சென்றுள்ளான்.
இந்த நிலையில் தப்பி ஓடிய கைதி குருமாரனை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.