பொள்ளாச்சியில் அருகே தனியார் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் கோபாலபுரத்தில் இருந்து KMT எனும் தனியார் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரை ஏற்றிகொண்டு பொன்னாயூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
தனியார் பெட்ரோல் பங்க் அருகே வரும் பொழுது, பொள்ளாச்சியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
சரக்கு வாகன ஓட்டி நடராஜ் மற்றும் பேருந்து பயணி கிட்டுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், விபத்து குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து சரக்கு வாகனம் மோதி இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.