கோவை மாவட்டம் காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் அதிமாக இருந்ததால், பெண் பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.
ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்றும், ஆனைகட்டிக்கு இரண்டு தனியார் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இவ்வாறு பயணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும், அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
அதே சமயம் வருமானத்திற்காக அதிகமான மக்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்துகள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், அப்பேருந்தின் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் வலைதளவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.